Home > Work > அரண்மனை ரகசியம் [Aranmanai Ragasiyam]
1 " ஒரு வார்த்தை கொல்லும், ஒரு வார்த்தை வெல்லும் "
― Indra Soundar Rajan , அரண்மனை ரகசியம் [Aranmanai Ragasiyam]
2 " முகத்துல கறுப்பா எது இருந்தாலும் எதிராளி திருஷ்டியை சலனப்படுத்தும்னும் சொல்வாங்க! "
3 " சாமி ஏணி எப்பவும் ஏத்தித்தான்விடும். ஆனா, அதால ஏறமுடியுமா சாமி? ஒரு வாத்யார்கிட்ட படிச்ச பையன் கலெக்டராவான், மந்திரியாவான். ஆனா அந்த வாத்யாரால ஆக முடியுமா சாமி? "
4 " ஒவ்வொரு பிறப்புக்கும் ஒரு நோக்கமும் இருக்கு. முதல்ல காரணத்தை தெரிஞ்சிக்கணும். பிறகு நோக்கம் தானா தெரியவரும். அந்த நோக்கத்தை நோக்கி செயல்பட்டா திரும்ப பிறக்க வேண்டாம். பிறக்கவும் முடியாது "
5 " மனசு தெளிவா இருக்கறவங்க முகம் பளிச்சின்னு இருக்கும். அதுலையும் அவங்க கண்களைப் பார்க்கும்போது நமக்கு கை எடுத்துக் கும்பிடணும்போல தோணும். அப்படிப் பட்டவங்க என்ன சொன்னாலும் அது அப்படியே பலிச்சுடும். "
6 " குறி வெச்சு செயல்படும்போது பாதை தானா தெரியும்கற "
7 " நாலு பக்கமும் நாலுவித மலை இருக்குது. ஒண்ணு ஆனைமலை, இன்னொன்று நாகமலை, அடுத்து பசுமலை, அப்பால பரிமலை அதாவது அழகர் குதிரைல ஏறி வர்ற அழகர் மலை. இப்படி நாலு பக்கமும் எங்க மதுரையை பாம்பும் பசுவும் யானையும் குதிரையும் நின்று காவல் காக்கறதா சொல்லுவாங்க. "
8 " இளமையில் கல்வியைத் தவிர மற்ற எல்லாமே கஷ்டப்பட்டுத்தான் கிடைக்க வேண்டும். சுலபமாக கிடைத்துவிட்டால் முதுமை அதற்கு நேர் மாறாக இருக்கும். "
9 " புரியலேன்னா மாயாஜாலம், புரிஞ்சா மெஸ்மரிசம்” “மெஸ்மரிசமா?” “ஆமா. கிட்டத்தட்ட அப்படித்தான். பீதாம்பர ஜாலவித்தைன்னு கேள்விப்பட்டிருக்கியா?” “என்னென்னமோ சொல்றீங்களே சேட்?” “என்னப்பா நீ. பீதாம்பரய்யர்ங்கறவர் உங்க தமிழ் ஆள் தான். அவர் ஜாலவித்தைல பலே கில்லாடி. 1008 வித்தை தெரியும் அவருக்கு. "
10 " வாழ்க்கை சார்ந்த விஷயங்கள் நமக்கு புரிய வந்த பிறகுதான் நம்பிக்கை வைப்போம். ஆனா, யோக ரகசியங்கள் அப்படி இல்லை. நம்பிக்கை வைச்சாதான் புரியும். அப்படி புரிஞ்சதை அடுத்தவங்களுக்கு புரிய வைக்கறதும் கஷ்டம். அது வேண்டாத வேலையும்கூட. அதனாலதான் சித்தர்கள் ‘கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்’னு சொன்னாங்க. "